02 April 2014

தேடல்

இன்று
மீண்டும் ஒரு முறை
உமிழ்நீருடன் சேர்த்து
ஓரிரண்டு சொற்களையும்
விழுங்கிக்கொண்டேன்

தோரணத்தில் படபடக்கும்
கட்சிக் கொடிகளை போல
எனக்குள் சிலிர்த்துக் கொள்கின்றன
அவை

தினமும் வளர்ந்த மெளனத்தில் 
நிம்மதியாய் அடங்கியும் போயின
அவை

ஒரே ஒரு சொல் மாத்திரம்
உளியை தேடி
அலைகிறது
தன்னை தானே செதுக்கிக்கொள்ள